×

மண்டபம் அருகே அங்கன்வாடி கட்டிடம் சேதம்: புதிதாய் அமைக்கப்படுமா…

 

மண்டபம், ஜன. 29: மண்டபம் அருகே சேதமடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி புதிதாய் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் பிரப்பன் வலசை ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

இதன் மேற்கூரைகளில் மரச்சடிகள் வளர்ந்துள்ளதுடன், உட்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே குழந்தைகள் நலன் கருதி சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரவும், தற்காலிகமாக அங்கன்வாடி நடைபெற மாற்று இடம் ஏற்பாடு செய்யவும் வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண்டபம் அருகே அங்கன்வாடி கட்டிடம் சேதம்: புதிதாய் அமைக்கப்படுமா… appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Mandapam ,Anganwadi Center ,Government Middle School ,Mandapam Union Prapan Valasai Panchayat ,Dinakaran ,
× RELATED சாலை ஓரத்தில் இடையூறு கருவேல மரங்கள் அகற்றம்